காருண்யா மருத்துவ கல்வி நிறுவனம் கடந்த 15 வருடங்களாக மருத்துவ கல்வி பணியாற்றிவருகிறது. தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர் நல மேம்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஆறு மாத மருத்துவ மூலிகை பயிற்சிக்கான துவக்க விழாவானது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தொலைநெறி கல்வி இயக்குனர் முனைவர் P.பாலசுப்பிரமணியம் தலைமையில் காருண்யா மருத்துவக் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் மருத்துவர் ரெவி ஜெஸ்டின் ராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ஐ ராபட்சிங் சிறப்பு விருந்தினராகவும் வேளாண் பல்கலைக்கழக முன்னாள் இயக்குனர் முனைவர் கே ஆர் அசோக், பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் N ரிச்சர்ட் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ மூலிகைகள் பயன்பாடு மற்றும் சந்தை வாய்ப்புகள் பற்றி கருத்துரை வழங்கினர். தொலைநெறி கல்வி இயக்குனர் குறிப்பிடுகையில் மூலிகை பயன்பாடு ஆனது உலக அளவில் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளதால் சந்தை வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் குறுகியகால இப்பயிற்சியானது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், பட்டதாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் இதன் மூலம் வங்கி கடன் பெற்று தொழில் முனைவோராக பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டார் பல்வேறு மூலிகை ஆர்வலர்கள் மற்றும் காருண்யா மருத்துவ மாணவர்கள் திரளாக கலந்து கொண்ட இவ்விழாவில் மருத்துவ மூலிகை பயிற்சிக்கான பாடநூல் ஆனது வெளியிடப்பட்டது. விழாவில் தொலைநெறி கல்வி இயக்கக துணை பேராசிரியர் முனைவர் S சுசிகரன் அவர்கள் நன்றி தெரிவித்தார். இப்பயிற்சியில் சேருவதற்கான காலவரம்பு இம்மாதம் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள
